முதலாளியின் உத்தரவை
கேட்டு கோடாரியும்
துணைக்கு முனியனையும்
கூட்டிக்கொண்டு
அந்த மலையின்
வடக்குப்புறம் இருந்த
சற்றே வரண்டு போன
அந்த அரசமரத்தை
வெட்ட கிளம்பினான்
கந்தன்
மரத்தை சுற்றி வந்தவனுக்கு
ஏதோ தோன்ற
வெட்டுதலை விட்டுவிட்டு
ஓரமாய் அமர்ந்தான்
ஏனென்று கேட்ட முனியனிடம்
பதில் ஏதும் கூறாமல்
அவன் பார்வை
அந்த மரத்தின்
அடிமரத்தில் கீழிருந்து
மூன்றடி உயரத்தில்
கீறலாய் இருந்த அந்த
பெயர்கள் மீது இருந்தது
கந்தன்-ராதா..
அப்பாவின் தற்கொலை
முயற்சியை காரணமாய்
காட்டி
நகர பேருந்தில்
நடத்துனராய் இருந்த
ரமேசை திருமணம் செய்து போனாள்
ராதா..
ஏதோ ஒரு காதல்
நாளில்
ஊருக்கு ஒதுக்குப் புறமாய்
இருந்த
இந்த மரத்தில்
அவர்கள் பெயரை
கல்லால் வெட்டி
எழுதியது ஞாபகம் வந்தது
கந்தனுக்கு
இப்போது
காய்ந்து கிடப்பது
இந்த அரச மரம் மட்டுமல்ல-
சாலை விபத்தொன்றில் கணவனை
இழந்து
இரு பெண் குழந்தைகளோடு
அம்மா வீட்டில் இருக்கும்
ராதாவும்தான்..
#SRINI
No comments:
Post a Comment