அந்த இரவு...

திருமணத்திற்கு பிறகான

முதல் இரவைப்பற்றி 

முகம் நிறைய வெட்கத்தோடு

அவளும் அவனும் அலைபேசியில்....


'என்னால் உன்

உறக்கம் கெடும் பரவாயில்லையா..'


'தெரியும்..'


'உன் காதுகள்

என்னால் கூச்சம் அடையும் பரவாயில்லையா'


'பராவாயில்லை'


'உன் கால்கள் என் மேல்

விழவேண்டிய தேவை வரும்

பரவாயில்லையா'


'எனக்கு வெட்கம் வருதுங்க'


'என் வாய் உன்னை

ஓயவிடாது

பரவாயில்லையா'


'ச்சீய்..'


திருமணம் முடிந்த

முதல் நாள் இரவு...


உணர்ச்சிகள் அடங்கிய பின்

உறங்கிப் போனான் அவன்..


சொல்லில் இருந்தது

செயலில் இல்லை,

ஆசுவாசத்துடன் அவளும்

அடங்கிப்போனாள்..


நடுநிசி நேரம்..

காதுகளில் ஏதோ

கடப்பாரை உருளும் சப்தத்தால்

கண்முழித்தவள் 

கண்ட காட்சியில் கலங்கிப்போனாள்..


வாழைப்பழம் தின்பவன் போல

வாயை திறந்துகொண்டு

கும்பலாய் எருமை கத்துவதுபோல்

குரட்டை சப்தம் எழுப்பினான் அவன்..


இப்போது தான்

ஆரம்பவரிகளின் அர்த்தம் புரிந்தது

அவளுக்கு..


உறக்கம் தொலைந்தது,

கூர்வாளாய் கூச்சம்

காதுக்குள் நுழைந்தது..


இப்போது..

அவள் கால்களை

அவன் மேல் வைத்தாள்,

உணர்ச்சிக்காக அல்ல

உதைப்பதற்காக..




No comments:

Post a Comment