இரட்டையர்

 'இந்த கவிதையை

ஏற்கனவே நீங்கள்

உள்ளீடு செய்து விட்டீர்களே'


'மறுத்து பேசுவதற்கு மன்னிக்கவும்,

மறுபதிப்பு அல்ல இது..

இரட்டையாய் எனக்குபிறந்த

இன்னொரு குழந்தை இது..

உருவம் ஒன்றுதான் 

ஆனால் 

அக்குழந்தை அல்ல இது..'


கவிதையும் 

கருவில் உருவாகும் குழந்தைதான்..

கற்ப பையில் உருவாவது 

இல்லை,

கற்பனை பையில் உருவாகிறது..

இருப்பதைப்போலவே இன்னொன்று பிறப்பதுவும் 

இயற்கையின் விளையாட்டு..

கற்பில் பிழை நிகழ்ந்தாலும் பரவாயில்லை 

கற்பனையில் பிழை நிகழக்கூடாதெனும் கவனத்துடன்தான் பிள்ளைகள் பெற்றெடுக்கிறோம்..

என்ன செய்வது 

கவனமாய் கருத்தரித்தாலும் பிள்ளைகளில் சிலர் பிழையோடு பிறந்து விடுகிறரர்கள்

அல்லது

பிள்ளைகளுடன் சில

பிழைகளும் பிறந்து

பிறந்துவிடுகிறது,

நெல்வயலில் 

புல் முளைப்பது போல..


திருத்தங்கள் 

வறவேற்கிறேன்

வருத்தங்கள் 

திரைமறைக்கிறேன்

No comments:

Post a Comment