சருகுகளின் கீரல்களை
சகித்துக்கொண்டே
நான் மட்டுமே நடக்கிறேன்
வன்ம மிருகங்கள் இருக்கும் அந்த
வனத்தில்..
புலி ஒன்று வந்தது
புரட்டி எடுக்குமோ என்று பயந்தேன்
புல் மேயத்தான் வந்தேன் என்றது
பாம்பு ஒன்றை பார்த்தேன்
பயந்து போய் பாய்ந்தோட முயன்றேன்
பல் இல்லை கடிக்க என்று பொக்கை வாயில் சிரித்தது
கத்திக்கொண்டே வந்த
கரடியை பார்த்தேன்
கடவாய் பல்லில் கறி சிக்கிவிட்டது
எடுத்து விடு என்றது..
'பானை வயிறை குறைக்க
பத்தியம் ஏதேனும் சொல்லேன்'
யானை ஒன்று கேட்டது
சீறி வந்த சிக்கம்
சிரித்து விட்டு பிழைத்து போ
என்றது
கனவு கலைந்து
கண் விழித்தேன்,
கரங்களால் என்னை வளைக்கிறாய் நீ..
கானக மிருகங்களிடம் தப்பிவிட்டேன்
கட்டில் மிருகத்திடம்
சிக்கிக்கொள்கிறேன்..
சிங்கத்திடம் சிக்கியிருந்தால் கூட
சீக்கிரமாய் மீண்டிருப்பேன் என்றேன்
சிரித்தபடி நெருங்குகிறாய்-
அர்தத்தோடும் ஆவேசத்தோடும்..
No comments:
Post a Comment